பெங்களூருவில் உணவு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி ரீமாவை கொலை செய்ததாக அவரது கணவர் தீரஜ் (24) கைது செய்யப்பட்டார். கொலை செய்த பின்னர் உடலை போர்வைக்குள் மறைத்து வைத்துவிட்டு, பீகாருக்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இடையே, ரீமா சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதில் கவனம் செலுத்தி வந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ரீமாவை கொலை செய்ததாக தீரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
