Skip to content

போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்ற நபர் கைது

திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சத்திரம் பஸ்ஸ்டாண்டு அண்ணா சிலை பூசாரி தெரு அருகே போதை மாத்திரை விற்றதாக சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அஜித் (வயது26) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 20 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

 

மலேசியாவில் இருந்து வந்த மயிலாடுதுறை பயணி… திருச்சி ஏர்போட்டில் மாயம்

மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாயகி(வயது52) இவரது கணவர் நாகராஜன் (வயது58) இவர் கடந்த 20 ஆண்டுகளாக மலேசியாவில் தையல்காரராகப் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் பிப்.22ந் தேதி, நாகராஜன் மலேசியாவிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார், ஆனால் வீட்டிற்குச் செல்ல வில்லை. அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து மாயமான நாகராஜனை தேடி வருகின்றனர்.

திருச்சியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருச்சி வயலூர் சீனிவாச நகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ரவி(57) ஆட்டோ டிரைவர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இந்த விரக்தியின் காரணமாக, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையில் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!