Skip to content

கௌரவ பட்டம் பெற்ற டைரக்டர் அட்லி

  • by Authour
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் அட்லி. ‘ராஜாராணி’ படத்தின் மூலம் பிரபலமான அவர், மெர்சல், தெறி, பிகில் விஜய்யின் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கினார். அதன்பிறகு பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த அட்லி, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார்.
இந்நிலையில் சென்னை சத்யபாமா பல்கலைக் கழகத்தின் 35 வது பட்டமளிப்பு விழாவில் திரைப்பட இயக்குநர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அட்லியின் மனைவி மற்றும் அவரது அம்மா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அட்லி, “இப்போதெல்லாம் பொய் பேசினால் இருமல் வருகிறது. எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது இந்த தருணம். என் கல்லூரி என்னை அரசனாக பார்த்தது. என் படங்கள் வெவ்வேறு இடத்தில் இருந்து எடுத்தேன் என்பார்கள்.  ஆனால் உண்மையாக நான் பார்த்த விஷயங்களில் தான் எடுத்தேன். உதாரணமாக பிகில் பட ராயப்பன் கதாபாத்திரம் ஜேப்பியார் சார்-ஐ இன்ஸ்பயராக வைத்து எடுத்ததுதான்” என்றார்.
error: Content is protected !!