Skip to content

பொள்ளாச்சியில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்… திமுகவில் ஐக்கியம்

திசை எங்கும் திராவிடம் கருத்தரங்கம் மற்றும் திமுகவில் புதிய இளைஞர்கள் இணையும் விழா. பொள்ளாச்சி நகர இளைஞரணி சார்பில் அதன் அமைப்பாளர் யுவராஜ் ஏற்பாட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இதில் தூய்மை பணியாளர் நல வாரியத் தலைவராக தமிழக முதல்வராக அறிவிக்கப்பட்ட திப்பம்பட்டி ஆறுசாமி கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகளால்

மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து புதிதாக 300 க்கு மேற்பட்ட இளைஞர்கள் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கழக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் கண்ணப்பன் மாநில தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் பொள்ளாச்சி நகரக் கழக பொறுப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன் , அமுதபாரதி , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் , உள்ளிட்ட கலந்துகொண்டனர்

error: Content is protected !!