கார்களுக்கு சுங்கச்சாவடி பாஸ் ஆக.15 முதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது: ‘ரூ.3,000 விலையில் FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் ஆகஸ்ட் 15, 2025 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பாஸ் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் வரை, எது முந்தையதோ அதுவரை செல்லுபடியாகும்.
வருடாந்திர பாஸ் கொள்கை, காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதன் மூலமும், நெரிசலைக் குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் உள்ள சர்ச்சைகளை நீக்குவதன் மூலமும் மில்லியன் கணக்கான தனியார் வாகன ஓட்டுநர்களுக்கு விரைவான, மென்மையான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்க உறுதிபூண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.