சென்னை வானகரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை, வானகரம் அப்போலோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் சட்டமன்ற குழு தலைவருமான திரு ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவ குழுவினர் பரிசோதனை ஸ்கேன் படம், ரிப்போர்ட் மருத்துவ அறிக்கைகளை மருத்துவர் அய்யா அவர்களிடம் என்னென்ன பாதிப்புகள் உள்ளது என்பதை எடுத்து கூறினார்கள்.
இதேபோல் ஜி.கே.மணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் நேரில் சென்று உடல்நலன் குறித்து விசாரித்தார். அவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.