Skip to content

25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

  • by Authour

தமிழகத்தில் தற்போது வெப்பச் சலன மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடல் புதிய காற்று சுழற்சி நீடித்துக் கொண்டு இருக்கிறது. இது தற்போது திசை மாறத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல் பகுதியில் இருந்து தமிழ்நாடு ஊடாக காற்று பயணிக்க உள்ளது. குறிப்பாக 25ம் தேதி முதல் இந்த காற்று கிழக்கு நோக்கி வீசத் தொடங்கும். இதனால் நான்கு நாட்கள் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். வெயில் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலன மழை இன்று தீவிரமாக பெய்யும் வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடங்கி உள் மாவட்டங்களில் மழை பெய்யும். டெல்டாவிலும் மழை பெய்யும். முன்னிரவில் தொடங்கி நள்ளிரவுக்குள் வட கடலோரப் பகுதியில் மழை பெய்யும். நாளை காற்று குளிர்ந்து இரு காற்று இணைந்து மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 25ம் தேதி வங்கக் கடலோரம் காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறிவிடும். 25, 26, 27, 28ம் தேதிகளில் மட்டும் தமிழகத்தில் மழை நீடிக்கும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும்.

error: Content is protected !!