கோவையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாகி
நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை இந்நிலையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது..
இன்று முதல் நான்கு நாட்களுக்கு தென்மேற்கு பருவ மழை பெய்யும் என்றும் மிக கனமழை வாய்ப்பில்லை எனவும் தெரிவித்து உள்ளனர். மேலும் பாலக்காடு – கணுவாய், கோவை மேற்கு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து இருந்தனர்.
பாலக்காடு – கணுவாய், பொள்ளாச்சி – கோவை சாலையில் மேற்கே அடுத்த நான்கு நாட்களுக்கு சற்று கனமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளனர்.
கொங்கு சமவெளி பகுதியில் ஒரு சில இடங்களில் மட்டும் அவிநாசி சாலை, வடக்கே மிதமான வெப்ப சலனம் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது, பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரெயின் கோட் அணிந்தும் குடையை பிடித்துக் கொண்டும் செல்கின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் மழை நீர் தேங்கியால் தூய்மை பணியாளர்கள் உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து தொண்டாமுத்தூர், மாத்தாம்பட்டி, ஆலாந்துறை, பேரூர் உள்ளிட்ட நகரை ஒட்டி உள்ள பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர்