பவண் கல்யான் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் இல்லை, அவர் ஆந்திராவிலே அரசியல் செய்யட்டும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகள், வேளாண் கருவிகளை பழுதுநீக்கும் பராமரிப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களி சந்தித்த அவர், “இங்கு உள்ள எல்லோரும் இந்துக்கள் தான். இந்தியாவில் இந்துக்கள் தான் அதிகம். இங்கு பெரும்பான்மை மக்களிடமிருந்து சிறுபான்மை மக்களுக்கு தான் பாதுகாப்பு
வேண்டும். அதுதான் அரசியல் கடமை; அந்தக் கடமையை செய்கின்ற அரசு திமுக அரசு. அந்த கடமையிலிருந்து தவறுகின்ற அரசு மத்திய அரசு.
எந்த இந்துக்களை இங்கு வாழ விடவில்லை என்று பவன் கல்யாண் சொல்லட்டும். அவர் உள்ள ஆந்திராவில் வேண்டுமானால் அது போன்ற சம்பவம் நடந்திருக்கலாம்; அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. பவன் கல்யாண் ஆந்திராவை போய் பார்க்கட்டும். தமிழ்நாட்டில் பவன் கல்யாண் தனது சித்து வேலையெல்லாம் காண்பிக்க முடியாது. அதற்கு தகுந்த இடம் இது அல்ல. அங்கு வெங்கடாஜலபதியை சொல்வார்கள்; இங்கு வந்து புதுசாக முருகன் கோசம் போட்டுள்ளார். பவன் கல்யாணை போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல.
இந்து சமய அறநிலை துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களை இருந்திருக்காது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றது வெட்ககேடானது. அதிமுக என்ற பெயர் வைத்து கொள்வதற்கே தகுதியற்றவர்கள், திராவிடத்திற்கு எதிராகத்தான் இந்த மாநாட்டை அவர்கள் நடத்தி உள்ளனர். இதுவரை ‘ராமா ராமா’ என்று கோஷம் போட்டவர்களை இன்று ‘முருகா முருகா’என்று கோஷம் போட வைத்துள்ளது திராவிட மாடல் அரசு. நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரானவர்களாக இருப்போமேயானால் இவர்கள் இன்று முருகவேசம் போட்டிருக்க முடியாது.
ஆன்மீகம் இங்கு தலைத்திருக்கிறது என்ற காரணத்தினால் தான், தமிழ் கடவுள் முருகனை தமிழர்களின் இதயத்தில் ஏந்தி உள்ளார்கள் என்ற காரணத்தினால் தான் தமிழர்களுக்கு யார் வேஷம் போடுகிறார்கள்? யார் உண்மையானவர்கள் என்பது தமிழக வாக்காளர்களுக்கு நன்றாக தெரியும். இந்த வேடதாரிகளை அவர்கள் நம்ப மாட்டார்கள். அயோத்தியில் என்ன ஆச்சு, அங்கு இந்தியா கூட்டணியில் தான் வெற்றி பெற்றது. உத்திரபிரதேசம் என்ன ஆச்சு. ராமர் பிறந்த மண்ணிலே வென்றது இந்தியா கூட்டணி பாஜக அல்ல. 2026 தேர்தலுக்கும் நேற்று நடந்த கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை.
தமிழ்நாட்டு வாக்காளர்கள் இந்துக்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கிருத்தவர்களாக இருந்தாலும் பௌத்தர்களாக இருந்தாலும் தங்கள் மனசாட்சி அவர்களுக்கு நன்றாக தெரியும். யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு? யார் தமிழ்நாட்டை ஆண்டாள் அமைதியாக இருக்கும்; யாரிடத்தில் அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும்; உணர்ந்து தமிழகத்தின் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இவர்களின் போலி வேடம் எடுபடாது-
தமிழ் கடவுள் முருகனை பாஜக இந்து முன்னணியினர் ஐகான் செய்து எங்கு கொண்டு போவார்கள். தமிழ்நாட்டை விட்டு முருகனை எங்கும் கொண்டு செல்ல முடியாது. வேறு மாநிலங்களில் முருகன் கோஷம் போட முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கோஷம் இருக்கிறது. கேரளாவில் ஐயப்பனுக்கும், ஆந்திராவில் வெங்கடசலபதிக்கும், மைசூரில் சாமுண்டீஸ்வரிக்கும் தான் கோஷம் போட முடியும். அதனால் முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச் செல்ல முடியாது . அவர் நம்மிடம் தான் இருப்பார். நம்மோடு தான் இருப்பார்…
வடமாநிலங்களில் சென்று நடைமுறைப்படுத்தி காட்டட்டும். இங்கு நாங்கள் எந்தவித மத கலாச்சாரத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். அனைத்து மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் கலாட்டாவை உருவாக்கி அங்கு பயங்கரவாதத்தை உருவாக்கி சண்டை சச்சரவை உருவாக்கி சந்தடி சாக்கில் நுழைந்தார்கள். அப்படி பாஜகவினர் தமிழ்நாட்டில் நுழைவதற்கு திராவிட மாடல் அரசு எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.