திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (45). விவசாய தொழிலாளி. இவர் நேற்று சிறுகாம்பூர்
கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி பரிதபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறை உதவியுடன் இறந்த வடமலை உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்குபிரேத பரிசோதனை கிடங்கில் உடல் கூராய்வுக்காகவைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இறந்த வடமலையின் மகன் தந்தை இறந்த தகவல் அறிந்து குவைத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி வந்தார். பிறகு திருவரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்த வடமலையின் உடலை உறவினர்களோடு சென்று அடையாளம் தெரியாதவர்கள் வாங்கி சென்று உள்ளனர். இந்நிலையில் இன்று காலை திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடலை வாங்க சென்ற வட மலையின் மகன் செல்வராஜ் மற்றும் உறவினர்கள் உடலை கேட்டபோது மருத்துவமனை நிர்வாகத்தினர் உங்களுடைய உறவினர்கள் ஏற்கனவே வந்து உடலை வாங்கி சென்று விட்டனர் என்று கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர்கள் நாங்கள் வராமல் எப்படி உடலை கொடுத்தீர்கள் என்று கேட்டு சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது பிறகு செல்வராஜ் தன்னுடைய தந்தை வடமலையின் உடலை காணவில்லை என்று அதனை மீட்டு தர வேண்டும் என்றும்,மின்சாரம் தாக்கி இறந்த தந்தையின் சாவுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று திருவரங்கம் போலீஸ் நிலையத்தில்
புகார் மனு கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் இறந்த வடமலையின் உடலை வாங்கி சென்ற வர்மா சாமிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த வடமலையின் குடும்பத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினர் உடன் இருந்தனர்.