Skip to content

திருச்சியில் லாரி மோதி முதியவர் பலி…

திருச்சிஉய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58) இவர் நேற்று வயலூர் ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த லாரி எதிர்பாராதமாக அவர் மீது மோதியது ‘இந்த விபத்தில் கருப்பையா சறுக்கி சாலையில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான கருப்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!