தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக 2299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 4 வரை பெறப்பட்டு, 12-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, தகுதியுள்ளவர்களுக்கு செப்டம்பர் 2-ம் தேதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதார்களுக்கு படித்தல், எழுதுதல் திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கு செப்டம்பர் 17 முதல் 23 வரை நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களில் இறுதி பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணை செப்டம்பர் 25-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விவரம் | தேதிகள் |
மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியீடு | 06.07.2025 (ஞாயிற்றுக்கிழமை) |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 04.08.2025 (திங்கட்கிழமை) |
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்ய கடைசி நாள் | 12.08.2025 (செவ்வாய்க்கிழமை) |
தேர்வு நாள் (படித்தல்/ எழுதல் திறன்) | 02.09.2025 (செவ்வாய்க்கிழமை) |
நேர்காணல் தேதி | செப்டம்பர் 17, 18, 19, 22 மற்றும் 23 |
தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடுதல் மற்றும் பணி நியமன ஆணை வழங்குதல் | 25.09.2025 (வியாழன்கிழமை) |
10-ம் வகுப்பில் கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கூடுதலாக் சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருப்பது சிறப்பாகும்.
இப்பணிடங்களுக்கு விண்ணப்பதார்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். முதலில் விண்ணப்பதார்களுக்கு எழுதப் படிக்கும் திறனறிவு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட தாலுகாவில் இருக்க வேண்டும். உங்கள் பகுதியிலேயே அரசு வேலை எதிர்பார்ப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
10-ம் வகுப்பு தகுதிக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழ் வாசிப்பு, எழுதுதல் திறனுக்கு 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். வசிப்பிடத்திடத்திற்கு 35 மதிப்பெண்கள், வாகனம் ஓட்டும் திறனுக்கு 10மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் 15 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியிடப்படும்.
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணையில் கூறியிருப்பதாவது :
சிறப்பு கால முறை ஊதியம் ரூ.11,100 – ரூ.35,100 என்ற ஊதியகட்டின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2299 பணியிடங்களில் காலியாக உள்ளது.
விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சமபந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.