திருச்சி டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து மிக விரைவாக நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கலெக்டர் சரவணன், சல்மா எம்.பி, மண்டலகுழு தலைவர் மதிவாணன் ஆகியோரும் அப்போது உடன் இருந்தார்