திருச்சி விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 30ம் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்தது செயற்கைக்கோள் விண்ணில் ஏவபட உள்ளது. இதில் 2 முக்கிய விஷயம் உள்ளது. மழைக்காலம், பருவ காலங்களில், மேகமூட்டங்கள் இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகை படம் எடுக்ககூடிய தன்மை உடையது. மற்றொன்று பேரிடர் காலங்களை முழுமையாக கண்காணித்து தெளிவான தகவல்களை தர கூடியது. இந்த செயற்கைகோள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டு 12 ராக்கெட்களை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பல்வேறு தொழில்நுட்பங்கள் பொருந்திய செயற்கை கொலை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல், மென்பொருள், பேரிடர் காலங்களில் துல்லியமாக கண்காணிக்க கூடிய தொழில்நுட்பங்கள் பொருந்திய பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஆளில்லாத செயற்கைக்கோளை இந்த மாதம் டிசம்பரில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்திய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய அனைத்து வகையான திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். குறிப்பாக சித்தூர் போரில் நமது செயற்குழு மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதையில் எங்களுடைய பணிகளும் இருக்கும் அதற்காக பல திட்டங்களை பயன்படுத்தி வருகிறோம்.