ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 650 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வௌியாகியுள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் 12,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவான நிலையில் பின்னர் ஏற்பட்ட நில அதிர்வு 4.5 ஆக பதிவானது.
