கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கள்ளையில் மகா மாரியம்மன், விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முருகனுக்கு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தற்போது புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைய டுத்து இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
புனித நீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, நாடி சந்தனம்
லட்ச்சார்ஜனை, மகா தீபாராதனை உள்ளிட்ட 2 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
இன்று அதிகாலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாக கொண்டுவந்து கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். அதனை தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் கள்ளை கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.