டிட்டோஜாக் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளருமான நீலகண்டன் தலைமையில் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் நாகராஜன் முன்னிலையில் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோவை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-
ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சம்பந்தமாக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை கருத்தில் கொண்டு,
தகுதி தேர்வு தேவையில்லை என்று மத்திய அரசிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வலியுறுத்தியும்,
கட்டாய உரிமைச் சட்டம் 2009 ல் பிரிவு 23 ல் திருத்தம் செய்ய வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் . என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக் கொண்ட அவர் அவசியம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் டிட்டோஜாக் அமைப்பில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் ஐசக் டேவிட்,பெர்ஜித் ராஜன், சுரேஷ் ராஜ், ஹக்கிம் அலி, பவுல்ராஜ் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி குமரகுருபரன், பாலகிருஷ்ணன் ஞானமுத்து ,ஸ்டாலின்
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்