திருச்சி மத்திய சிறையில் தண்ணீர் தொட்டிகள் விழுந்து தண்டனை கைதி பரிதாபமாக இறந்தார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபின் குமார் (வயது 19). இவர் பெரம்பலூர் டவுண் காவல் நிலையம் மற்றும் திருச்சி மாநக கே.கே.நகர் காவல் நிலையம் ஆகியவற்றில் பதியப்பட்ட குற்ற வழக்குகளில் கைதாகி, தண்டனை கைதியாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி ( அடைக்கப்பட்டார். இவர் மனநலம் பாதிப்புக்கான சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர், சிறையில் உள்ள கழிவறை அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார்.அப்பொழுது இவருக்கு வலிப்பு நோய் வந்து, தண்ணீர் தொட்டிக்குள்ளே விழுந்துள்ளார். இதனை பார்த்தவுடன் அருகில் இருந்த சிறைகாவலர்கள் அவரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸில் தூக்கிச்சென்றனர். ஆனால் அவரை மருத்துவர் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரது பிரதத்தை உடற்கூறு ஆய்வுக்காக சவக்கடங்கில் வைத்துள்ளனர். இது குறித்து திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தண்டனை கைதி மூளையில், ரத்தக்குழாய் வெடிப்பு
கரூர் டவுண் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் கைதாகி 09.05.2023 முதல் 5 வருடம் தண்டனை பெற்று, கைதியாக, கேரளா மாநிலம், பத்தினம் திட்டா அடுத்த பொய்கை அய்யலூர் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார் (வயது 65) என்பவர், திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தனக்கு தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறி மத்திய சிறைச்சாலையில் உள்ள மருத்துவ முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு, சிறைச்சாலை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளையில் ரத்தக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளனர். பின்னர் அவரை மருத்துவமனையில் உள்ள ரெட் ஜோன் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

