Skip to content

கரூர் -தவெக பரப்புரையில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஆஜர்…

  • by Authour

கரூரில் சிபிஐ விசாரணைக்கு தவெக பரப்புரையின் போது பாதுகாப்பில் இருந்த காவலர்கள் ஆஜராகியுள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்டமாக எஸ்ஐடி குழுவிடமிருந்து ஆவணங்களை பெற்ற சிபிஐ அதிகாரிகள் அது தொடர்பான விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர்ந்து கடந்த 5 தினங்களுக்கு முன்பாக சம்பவ இடமான வேலுச்சாமிபுரம் பகுதியில் 3d டிஜிட்டல் ஸ்கேனர் உதவியுடன் அளவீடு செய்யும் பணியை நடத்தினர்.

இதனை தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று சிபிஐ விசாரணைக்கு காவலர்கள் ஆஜராகியுள்ளனர்.

செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அப்போது பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 12 பேர் சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளனர்.

error: Content is protected !!