Skip to content

ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை ரூ.3,000-ஆக வழங்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில வாரங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!