கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 234 பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர், ஸ்மார்ட்போன், பேட்டரி வீல் சேர், தையல்

இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி

சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரசு

அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

