திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (58)ஆட்டோ டிரைவர் இவருக்கும். மன்னார்புரம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி ரா ஜேஷ் கண்ணன் (34) மற்றும் பிரகாஷ் (21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று ரத்தினம் மன்னார்புரம் ஜங்ஷன் அருகே ஆட்டோ பட்டறையில் தன் ஆட்டோவிற்கு பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் மற்றும் பிரகாஷ் ஆகிய இரண்டு பேரும் ரத்தினத்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியுள்ளனர் காயமடைந்த ரத்தினம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குபதிந்து ராஜேஷ் கண்ணன் மற்றும் அவருடன் இருந்த பிரகாஷ் 2 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

