ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்தவும் கட்டணத்தை மார்ச் 12ம் தேதிக்குள் தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவும் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.

