கோவை, பொள்ளாச்சி அடுத்த டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், போன்ற வனப்பகுதியில உள்ள புள்ளிமான், வரையாடு, காட்டு மாடு, யானை, கரடி,சிறுத்தை, போன்ற வன விலங்குகளை காண்பதற்காக தமிழக கேரளா வனத்துறையினர் ஜீப், வேன். சபாரி மூலம் கட்டணங்கள் வசூலித்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ள நிலையில் கேரளா வனத்துறை சுற்றுலாப் பயணிகளை ஜீப் சபாரியில் அழைத்து செல்லும் பொழுது பரம்பிக்குளம் அருகே கன்னிமாரா தேக்கு செல்லும் வழியில் இரண்டு ஆண் யானைகள் சண்டையிட்டு மோதிக் கொண்டதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துள்ளனர் இது தற்பொழுது வைரலாகி வருகிறது.

