திருச்சி: ஆளுநர் மாளிகை முற்றுகை போஸ்டர் – பரபரப்பு
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளில் மதவெறி, சாதிவெறி கருத்துக்களை மாணவர்கள் மத்தியில் பேசுவதாக கூறி, தமிழக ஆளுநரை வெளியேற வலியுறுத்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகையிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

