தஞ்சை பனகல் கட்டிடம் அருகே அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், 100 நாள் வேலையை சிதைக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்திற்கான நிதியை மாநில அரசுகள் மீது சுமத்தியுள்ளதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

