அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்மோஸ் நீரிணை பகுதியை கப்பல்கள் கடக்க ஈரான் தடைவிதித்துள்ளது. அந்த வழியாக சென்ற பல எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. ஒரு பீப்பாய்க்கு 9 விழுக்காடு விலை உயர்ந்து 93 அமெரிக்க டாலரானது. மேலும் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். போரால் வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை இரு நாட்களில் நிறுத்தக் கூடும் என கத்தார் தகவல் அளித்துள்ளது.
இதனிடையே ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் கச்சா எண்ணெய் விலை, அடுத்த 3 வாரங்களுக்குள் $150 வரை உயரக்கூடும் என கத்தார் எரிசக்தி அமைச்சர் சாத்-அல்-காபி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். நேற்று நிலவரப்படி, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் $85ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

