சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 250 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகின்றனர். ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ள நிலையில், கூடுதலாக 250 கம்பெனி ராணுவப் படை வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் சுமார் 20,000 துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு கம்பெனி துணை ராணுவப் படை என பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

