நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி பகுதியில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் என்பவரது காரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அதிமுக தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட 62 மொய் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இவை கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

