சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டால் பணம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிப்பு. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானபின் அம்பத்தூரில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது

