காதல் திருமணம் செய்த மகளை பெற்ற தந்தையே நெஞ்சின் மீது அமர்ந்து மூச்சுதிணற செய்து கொலை செய்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. மச்செர்லாவை சேர்ந்த சௌடேஸ்வரி (22). அதே பகுதியை சேர்ந்த நாகராஜூவை கடந்த மாதம் 4ம் தெதி வீட்டை விட்டு வௌியேறி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மகளை வீட்டிற்கு அழைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

