சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடியுங்கள்!” – செல்வபுரத்தில் சீமான் ஆவேசப் பேச்சு!
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.ரஜபு நிஷா அவர்களை ஆதரித்து, செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு அனல் பறக்கும் உரையை ஆற்றினார்.
திராவிடக் கட்சிகள் மற்றும் விஜய்க்கு நேரடி சவால் நிதியாதாரம் எங்கே?: “திராவிடக் கட்சிகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கின்றன. ஆனால், இந்தத் திட்டங்களுக்கான பணத்தை எங்கிருந்து

எடுப்பார்கள் என்பதை அவர்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
விஜய் மீது விமர்சனம்:
“தனித்துப் போட்டி என்று கூறிய விஜய், இப்போது மாற்றுக் கட்சிகளில் இருந்து வேட்பாளர்களை இழுத்து பெரும் கூட்டணி அமைத்துள்ளார்” என தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை விமர்சித்தார்.
“இலவசம் என்ற சொல்லே இருக்காது”
சீமான் தனது உரையில் இலவசக் கலாச்சாரத்தை கடுமையாகச் சாடினார்:
“என் ஆட்சியில் இலவசம் என்ற சொல்லே மண்ணில் இருக்காது. மக்களைப் பொறுப்பற்றவர்களாக மாற்ற மாட்டேன்.”
“தரமான கல்வி, உயர்ந்த மருத்துவம், தூய குடிநீர் – இந்த மூன்றும் மட்டுமே கட்டணமில்லாமல் வழங்கப்படும். மற்ற அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.”
சிறுபான்மையினர் விவகாரம்: சர்ச்சைப் பேச்சு
சிறுபான்மையினர் என்ற அடையாளத்தைப் பற்றிப் பேசுகையில் சீமான் கடும் தொனியை வெளிப்படுத்தினார்:
“சிறுபான்மையினர் என யார் கூறினாலும் அவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும். இதற்காக எத்தனை வழக்குகளை வேண்டுமானால் நான் எதிர்கொள்ளத் தயார். உண்மையில் ஸ்டாலின், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்களே சிறுபான்மையினர்; மக்கள் அல்ல.”
பொருளாதார மாற்றமும் மருமகள் ரஜபு நிஷாவும்
சாராய வருமானம் vs விவசாயம்:
மதுபான விற்பனை மூலம் வரும் வருமானத்தை விட, ஆடு மாடு வளர்ப்பதன் மூலம் அரசுக்கு அதிக வருமானம் ஈட்ட முடியும் எனப் புதிய பொருளாதாரப் பார்வையை முன்வைத்தார்.
குடும்ப உறவு: “என் மருமகள் ரஜபு நிஷாவை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் மகன் முதல்வரானால், அது நீங்கள் முதல்வரானதற்குச் சமம்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

