பிஹாரின் துர்க்கவுலியா ரகுநாத்பூர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2016 முதல் பிஹாரில் மதுவிலக்கு உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 முதல் தற்போது வரை கள்ளச்சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்துள்ளது.

