காரைக்காலில் கோத்துகுளம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் 15 நிமிடங்களுக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. VVPAT இயந்திரத்தில் புகை வந்ததையடுத்து, அதனை வாக்குச்சாவடிக்கு வெளியே அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இயந்திரத்தின் பேட்டரி அதீதமாக சூடானதால் புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, பேட்டரி மாற்றப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
