பாட்ஷா திரைப்பட பாணியில் ஆட்டோ ஓட்டி அசத்திய அன்பில் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திருவெறும்பூரில்

தொ.மு.சா வில் 500 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்பொழுது 500க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பின்பு அனைவரிடமும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் முனைவர் அன்பில் மகேஷ்

பொய்யாமொழி அவர்கள் ஆட்டோ ஓட்டி அசத்தினார்.
அவரைப் பின் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கணேசா ரவுண்டானாவில் இருந்து மெயின் பில்டிங் வரை சென்று மீண்டும் கணேசா வந்தடைந்தார். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களிடையே மகிழ்ச்சியும் பெரும் வரவேற்பும் பெற்றார். அப்பகுதியில் அலை கடலென அணிவகுப்புடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பின் சென்றனர்.
