விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவருமே தங்கள் பிரிவை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத போதிலும், ஒரே வீட்டில் அவர்கள் தனித்தனியாகவே வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்.24ல் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு பின்னர் ஏப்.20ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஆஜராக உத்தரவு.
நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானால் தேர்தல் நேரத்தில் இமேஜ் பாதிக்கும், தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பது விஜய் ஆதரவாளர்கள் கருத்து – ஆனால், விஜய் எப்படி முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.
