செயற்கை நுண்ணறிவால் (AI) நேர்மை, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைக் கற்றுத்தர முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் ஒருபோதும் தகுதியான ஒரு விரிவுரையாளருக்கு (Lecturer) இணையாக முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஆன்லைன் வகுப்புகள் என்பவை நேரடி கற்றல் முறைக்கு மாற்றாக முடியாது எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், குறிப்பாகச் சட்டக்கல்வியைப் பொறுத்தவரை வகுப்பறைப் பாடங்கள் மூலம் மட்டுமே மாணவர்கள் துடிப்பான வழக்கறிஞர்களாக உருவாகிப் பணியாற்ற முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
