நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்தின் மீதான போலீஸ் நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவைக்கு வந்து நேரில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
