புனேவில் கிரெடிட் கார்டு பில் கட்டாதவரை 3 கலெக்சன் ஏஜெண்ட்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். நடுரோட்டில் வழிமறித்த ஏஜெண்ட்கள், உடனடியாக பணத்தை கட்டும்படி வற்புறுத்தியுள்ளனர். ஒரு பெண் தடுத்ததையும் மீறி, அவர்கள் 3 பேரும் நடுரோட்டிலேயே அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ஏஜெண்ட்கள் மூலம் பணம் வசூலிப்பதை RBI தடை செய்துள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
