திருச்சி மாவட்டம், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் சுகாதாரமற்ற குடிநீரை பருகும் அவல நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழாய் உடைப்பை சீர் செய்யும் விதமாக அதிகாரிகளின் கவனத்தை நூதன முறையில் ஈர்க்கும் பொருட்டு சமூக ஆர்வலர் இன்று சாலையில் கருவேப்பிலையை நடவு செய்தார்.
