தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு, பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நாளை (மே.9) நடைபெறும் பயிற்சியில் 14 வயது ஆண்கள், 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவர்கள் www.tnca.in என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நேரில் எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
