ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ், கைத்தறித்துறை முதன்மைச் செயலாளராக டி.என்.வெங்கடேஷ், வேளாண்மைத் துறை செயலாளராக பி.சங்கர், மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக பி.முருகேஷ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஜி.லதா, வேளாண்மைத் துறை இயக்குநராக கே.வி.முரளிதரன், வருவாய் நிர்வாக ஆணையராக காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
