திருச்சி கருமண்டபம் பொன்னகர் பகுதியில் சேர்ந்தவர் சாரதி பாண்டி இவரது மனைவி பாண்டி பிரியா (25) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சாரதிபாண்டிமனைவி பாண்டி பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டு வெளியே சென்று விட்டார்.
இந்நிலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பாண்டி பிரியா காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சாரதிபாண்டி செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டி பிரியாவை தேடி வருகின்றனர்.
