திருச்சி மாநகர காவல்துறையில் பயன்பாட்டில் இருந்து கழிவு செய்யப்பட்ட 9 வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கு வரும் ஜூன் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஜூன் 11 முதல் 15 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம். முன்பணமாக ரூ.5,000 செலுத்த வேண்டும் என கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.
