தமிழகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினரும், அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு தமிழக அரசு தரப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
