திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் லேப்டாப்பை திருடிய ராம்ஜி நகரைச் சேர்ந்த தவெக நிர்வாகியான பரணிதரன் என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 2 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து வேறு ஏதேனும் குற்றசம்பவங்களில் அவர் ஈடுபட்டு உள்ளாரா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
