குயின் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் அழகுப் பெண்கள் அன்னநடை போட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
பெண்களின் திறமைகள், தன்னம்பிக்கை, தனித்துவம் மற்றும் ஆளுமை வளர்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர்

சார்பில் குயின் ஆப் கோயம்புத்தூர் என்ற பழகிப் போட்டி கோவையில் நடைபெற்றது இதன் இறுதிச்சுற்று இன்று அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில்

நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பல்வேறு கட்டத் தேர்வுகளை வெற்றிகரமாக கடந்த

போட்டியாளர்கள் பங்கேற்று, தங்களது திறமைகளையும் ஆளுமையையும் வெளிப்படுத்தினர்.
மேலும், பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு மகுடம் சூட்டி கௌரவித்தார்.
