மத்திய அரசின் தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு கடந்த மே.3-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நீட் எழுதிய மாணவர்களுக்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை (ஜூன்.21) நடைபெற உள்ளது. இந்த தேர்வினை திருச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் தேர்வு எழுதிய 6,688 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்காக 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
