கத்தாரில் LNG கேஸ் ஆலை வெடிவிபத்தில் பலியான 3 தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்களின் உடல்களை உடனடியாக தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். விபத்தில் பலியான 12 இந்தியர்களில் 3 பேர் தமிழர்கள் என இன்று காலை அறிவிக்கப்பட்டது.
