சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) விவேகானந்தா சுக்லா மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிப்பு
